X

செலிங்கோ ஹெல்த்கெயார் சேர்விஸஸ் புற்றுநோய் சிகிச்சைக்கு பலதரப்பட்ட சிகிச்சை தெரிவுகளை வழங்குகிறது.

நாம் பலதரப்பட்ட சிகிச்சைகளை வழங்குவதனால், நோயாளர் தமது வகை மற்றும் வடிவத்துக்கு பொருத்தமான சிகிச்சையை பெறலாம்.

கதிர்ச்செயற்பாட்டு அயடின் சிகிச்சை

இதன் எளிய தன்மைக்காக கதிர்ச்செயற்பாட்டு அயடின் (RAI) ஆனது hyperthyroidism (அதிசெயற்பாட்டு தைரோய்ட்) இனது சிகிச்சைக்காகத் தெரிவு செய்யப்படுகின்றது: இதனை ஒற்றை சிகிச்சை வேளையில் கொடுக்க முடியும். RAI குறைவான அல்லது எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.

RAI எவ்வாறு செயற்படுகின்றது?

RAI ஆனது மீன், கடற்பாசி மற்றும் அயடின் சேர்க்கப்பட்ட உணவில் இருக்கும் அயடினை ஒத்ததாக இருந்தாலும் நோயைக் குணமாக்கும் விளைவை உருவாக்கும் இலத்திரன் அல்லது பீட்டா துணிக்கையை வெளியேற்றுவதில் வேறுபடுகின்றது. இந்த சிகிச்சையில், தைரொயிட் ஆனது அயடினை விரைவாகப் பெற்றுக்கொண்டு, வழமையான உடல் இயக்கங்களுக்கு அவசியமான தைரொய்ட் ஹோர்மோன்களை உற்பத்தியாக்குவதை அடிப்படையாகக் கொண்டது.

RAI நீரில் கரையும் கெப்சியூல் ஒன்றாக வழங்கப்படுவதோடு, இறைப்பை மற்றும் குடலினால் மிக விரைவாக அகத்துறிஞ்சப்படுகின்றது. இது பின்னர் இரத்த ஓட்டத்தினால் தைரொய்ட்டுக்கு கொண்டு செல்லப்படுவதோடு, இங்கு சில தைரோய்ட் கலங்களின் செயற்பாட்டை RAI தடுப்பதோடு, அதிக கதிர் செயற்பாட்டு அயடினுடன் அதிகளவு கலங்கள் செயற்பாட்டை நிறுத்தும். மேலதிக தைரொய்ட் ஹோர்மோன்கள் மேலும் உற்பததி செய்யப்படாது hyperthyroidism இனது அறிகுறிகள் மறையும்.

பக்க விளைவுகள்

RAI சிகிச்சை சில பக்கவிளைவுகளை கொண்டிருப்பதோடு இவை கிரமமற்று நிகழும்:

பக்க விளைவுகள் சிகிச்சைகள்
 RAI சிகிச்சைக்கு பின்னர் சில நாட்கள் தொண்டை நோவு  Acetaminophen
 உமிழ்நீர் சுரப்பிகளின் வீக்கம்  கடினமான இனிப்புகளை சில நாட்கள் உறிஞ்சுங்கள்
 சிறிதளவு குமட்டல்  அயடின் சிகிச்சைக்கு முன்னும் பின்னும் இரு மணித்தியாலங்கள் உணவைத் தவிருங்கள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முகங்கொடுக்கும் கதிரியக்கத்தின் அளவைக் குறைப்பதற்கு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முக்கியமானவை. ஏனெனில் சிகிச்சைக்கு பின்னர் சில நாட்கள் வரையில் கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள RAI இலிருந்து சிறியளவு கதிரியக்கம் வெளிப்படும்.

  1. ஏனையவர்களுடன் விசேடமாக சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மாருடன் நீண்டநேர தொடுகையைத் தவிருங்கள்:  சிகிச்சைக்கு ஆளானவர் மற்றும் கடந்த 24 மணித்தியாலங்களில் அவருக்கு அருகில் 2 மணித்தியாலங்களுக்கு அதிகமான நேரத்தை செலவிட்டவர்களிடம் ஒரு கை நீளமான பொதுத் தூரத்தை பேணுங்கள். இது விசேடமாக சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மாருக்கு உரியது. சிகிச்சைக்கு பின்னர் ஒருவரோடு சிறியளவு தொடர்பு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், ஒன்றாக உறங்குதல், தொலைக்காட்சி பார்த்தல், திரைப்படங்களுக்கு செல்லுதல், நீண்டநேர பராமரிப்பு அல்லது விமானப் பயணங்கள் என்பன சிகிச்சை நடைபெற்று 11 நாட்கள் வரை தவிர்க்கப்படுதல் வேண்டும்.
     
  2. உணவுகளைப் பகிர்ந்துகொள்ளல்: உணவுகளைப் பகிர்ந்துகொள்ளல் மற்றும் குவளைகள், போத்தல்கள், சோடா கேன்கள், தண்ணீர், பியர் ஆகியனவற்றைப் பகிர்ந்துகொள்வதைத் தவிர்க்கவும். சிகிச்சையைப் பெற்றுக்கொண்டவர் ஒரு ஐஸ்கிறீம் கோன் சாப்பிட்டால் வேறு எவரும் அதனை சாப்பிடக் கூடாது. சிகிச்சை பெற்றவர் பயன்படுத்திய தட்டுகள் மற்றும் சாப்பிடும் பாத்திரங்களை நன்கு கழுவிய பின்னர் மட்டுமே குடும்பத்தில் மற்றையவர்களது பாத்திரங்களுடன் சேர்க்கப்பட வேண்டும். உடனடியாக வீட்டிற்கு வெளியே அப்புறப்படுத்தப்பட்டால் மாத்திரமே காகிதத் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்தப்படலாம். சமைப்பது ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் சமைக்கும்போது சுவைத்துப் பார்க்க பயன்படும் பாத்திரம் பயன்படுத்த முன்னர் கழுவப்பட்டிருக்க வேண்டும்.
  3. அதிகளவு பானங்களை அருந்துவதோடு கழிவறையில் இரு தடவைகள் ப்ளஷ் செய்யுங்கள்: சிகிச்சைக்கு உள்ளானவர் அதிகளவு திரவங்களை விசேடமாக நீரை அருந்துதல் வேண்டும், இது உடலிலிருந்து RAI ஐ வெளியேற்ற உதவும். கழிவறையை பயன்படுத்திய பின்னர் இருமுறை ப்ளஷ் செய்யுங்கள். ஏதேனும் சிறுநீர் சிந்தியிருப்பின் அதனை கவனமாக சுத்தமாக்குங்கள். சிகிச்சைக்கு உள்ளானவர், உடற்பயிற்சியின் பின்னர் போன்ற அதிகளவு வியர்வையை வெளியேற்றாத சந்தர்ப்பங்களில் அவரது ஆடைகள் வேறாகவே கழுவப்பட வேண்டும்.
  4. கர்ப்பம் தரித்தல் அல்லது பாலூட்டுதல் தவிர்க்கப்படுதல் வேண்டும்: தாய்ப்பாலில் அயடின் செறிவாக இருப்பதாலும் வெளியேற்றப்படுவதாலும், பாலூட்டும் தாய்மார் RAI தரப்படுவதற்கு முன்னர் நிறுத்துதல் மிக முக்கியமானது. கர்ப்பமான பெண்கள் RAI சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதில்லை, அத்துடன் சிகிச்சைக்குப் பின்னர் 6 மாத காலம் கர்ப்பம் தரித்தல் தவிர்க்கப்பட வேண்டும்.

 

logo